வெளிநாடு ஒன்றில் தாம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவிப்பு
வெளிநாடு ஒன்றில் தாம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தென் மாகாணசபை ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம நேற்றுத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தாம் வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சமடைய உத்தேசித்துள்ளதாகவும், அநேகமாக இந்தியாவில் தஞ்சம் கோர எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா தவிர பிரிட்டன் கனடா ஆகிய நாடுகளில் ஒன்றிலும் தஞ்சம் கோரலாமென எண்ணியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொலீசாரின் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் ஒருபோதும் திருப்தியடையப் போவதில்லையெனவும், இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டால் நிலைமை மேலும் பாரதூரமானதாக அமையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த தென் மாகாணசபைத் தேர்தல்களின்போது நிசாந்த முத்துஹெட்டிகம அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்கள் வரிசையில் 3ம் இடத்தை வகிப்பவராவார்.
Average Rating