பா.நடேசன், புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலை செய்யப்பட்டது உண்மையே -பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி

Read Time:6 Minute, 28 Second

சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கைமீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே. இவ்வாறு ந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலைசெய்யப்பட்டதும் உண்மையே என்றும் பேராசிரியர் பிரம்மா ஊர்ஜிதம் செய்துள்ளார். புதுடில்லியில் உள்ள இந்திய கொள்கைஆய்வு மத்தியநிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி ஊடகம் ஒன்றுக்கு இலங்கையில் நடந்த போர், அதில் இந்தியாவின் பங்கு,  இப்போதைய உறவு மற்றும் இலங்கையின் எதிர்கால அரசியல்உத்திகள் குறித்து நீண்ட பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் முக்கிய விடயங்களாவன, யுத்தகாலத்தில் சரணடைந்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை உண்மையே. அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர். இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர், ஐ.நாவின் பொது செயலாளர் பான் கீமூன், ஐ.நா  தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் ஐ.நாவின் பல சிரேஷ்ட உறுப்பினர்களுடனும் அவர்கள் செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கோகொன்னவும் இணைந்திருந்தார். எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொலைசெய்யப்பட்டனர். இதற்கு இந்திய தேசிய புலனாய்வு துறையினர் பெரும் ஒத்துழைப்பு வழங்கினர் மனிதஉரிமை மீறல்களும், யுத்த குற்றங்களும் யுத்தகாலங்களில் செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு தரப்பினர்மீது  பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தமது பாரிய எறிகனை வீச்சுக்களை நடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்தது, புலிகள் பொதுமக்களை தடுத்துவைத்து கேடயங்களாக பயன்படுத்தியமையும் அது போன்றதுதான். ஆனால் அவை அனைத்தும் சாட்சியமற்று மறைந்து போயின.

அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு சுயாதீன செய்தியாளர்களை அனுப்பாததன்மூலம் அவை அனைத்தையும் மறைத்துவிட்டது என்பதே உண்மை. வெளிநாட்டு ஆதிக்கம் அற்ற, சமாதானமான இலங்கையையே இந்தியா விரும்புவதாக தெரிவித்த அவர், அதன்காரணமாக பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கைமீதான ஆதிக்கத்தை இந்தியா கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிராந்திய வல்லரசுக்கான போட்டியின் மத்தியில் இலங்கை மக்கள் உட்படுத்தப்படுவது, இலங்கை மற்றம் ஆசிய மக்களுக்கு உகந்தது இல்லை.

இந்நிலையிலேயே இலங்கையின் மீள்கட்டுமானம் மற்றும் சீர்படுத்தலுக்கான முனைப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியநிலை உருவாகியுள்ளது. இந்த ஒரு நடவடிக்கை மாத்திரமே, தமிழர்களின் நீண்டநாள் கலாசார மற்றும் அரசியல் அபிலாசைகள் மீதான சந்தேகங்களுக்கு விடையாக அமையும். இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள் பிரச்சினைக்கான தீர்வுதொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக அடையாளப்படுத்த முடியாதுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே அக்கறைசெலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அது, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும். இதற்கு முன்னர், இலங்கையின் முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல், சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகவே  நான் கருதுகிறேன் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “பா.நடேசன், புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலை செய்யப்பட்டது உண்மையே -பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி

  1. கடந்த ஐந்து மாதமாக குண்டு வெடித்தோ பதுங்கு குளிகளிலோ நூற்றுகணக்கானோர் தினசரி இறந்துபோவது முற்றாக நின்றுவிட்டது.
    அனைவரும் மீளக்குடியேற இன்னமும் நாலு மாதம் எடுக்கும்.
    மீளக் குடியேற்றுவதில் இலங்கை அரசு இன்னமும் துரிதமாக செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கிய மூன்று காரணங்கள்
    ஆயிரக்கணக்கான புலிகள் இடம்பெயந்த மக்கள் மத்தியில் ஒளிந்திருப்பது.
    மீளக் குடியேறக்கூடிய இடங்களில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் இன்னமும் புதைந்திருப்பது
    இன்னமும் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள் தற்கொலை அங்கிகள் ஆயுதங்கள் மீளக் குடியேற்றவேண்டிய இடங்களில் இருந்து கண்டுபிடித்து எடுக்கவேண்டியிருப்பது
    அப்படியிருந்தும் உலக வரலாற்றிலேயே இவ்வளவு தொகையாக இடம்பெயந்த மக்களை உள்நாட்டில் வைத்து பராமரித்த சம்பவம் இலங்கையில்தான் நடந்துள்ளது. அத்துடன் இவ்வளவு விரைவாக இடம் பெயந்தவர்களை மீளக் குடியேற்றி வருவதும் இதுவரை உலகில் வேறு எங்கும் நடைபெறவில்லை.
    இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய பின் அத்தனை தமிழ்ஈழ ஊடகங்களும் தமிழக சினிமாவை நோக்கி நகர வேண்டியதுதான் ஏற்கனவே பல தமிழ்ஈழ ஊடகங்கள் கவர்ச்சி படங்களை இணைக்க ஆரம்பித்து விட்டன
    அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் கடந்த வருடம் பரவிய காட்டுத்தீயில் எழுநூறு ஆமாம் ஆக எழுநூறு குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். இவர்களில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையான குடும்பங்கள் இன்னமும் இடம்பெயந்தவர்களாகவே தற்காலிக இடங்களில் வாழ்ந்து வருகின்றனர் . அவுஸ்திரேலிய அரசாலோ விக்டோரியா மாகாண அரசாலோ அல்லது காப்புறுதி நிறுவனங்காலேயோ இவர்களை இன்னமும் மீளக் குடியமர்த்த முடியவில்லை.
    நாலு வருடத்திற்கு முன் கத்ரீனா என்ற புயல்காற்றில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநில மக்களில் இன்னமும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயந்த தற்காலிக இடங்களிலேதான் வசித்து வருகின்றனர். இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திரும்பலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
    கண்ணிவெடியோ புதைத்து வைத்த ஆயுதங்களோ ஒளித்திருக்கும் புலிகளோ இல்லாத இந்த நாடுகளில் பொருளாதார தொழில்நுட்ப வலிமை இருந்தும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் இலங்கை மாதிரி துரிதமாக செயல்பட முடியவில்லை.
    நடைமுறை யதார்த்தம் புரியாமல் கனவுகாண்பவர்களால்தான் ஏனிந்த மந்தம் என குறை சொல்லமுடியும்

  2. எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து
    எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்”.

    “இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே
    உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி “

Leave a Reply

Previous post இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு
Next post சிரிப்பதற்காக அழுத சபாநாயகர் லொக்குபண்டார..