76பேருடன் கனடா சென்றடைந்துள்ள ஓசியன்லேடி என்கிற கப்பல் புலிகளுடையது..
Read Time:1 Minute, 16 Second
இலங்கையிலிருந்து 76பேருடன் கனடா சென்றடைந்த ஓசியன் லேடி என்கிற கப்பல் புலிகளுடையதென தெரிவிக்கப்படுகின்றது. இக்கப்பல் புலிகளால் வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் வன்னியில் மோதலில் தோல்வியடைந்த சிரேஸ்ட உறுப்பினர்கள் இக்கப்பலில் பதுங்கியிருக்கலாமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கப்பல் கடந்த 16ம் திகதியில் கனடாவில் கைப்பற்றப்பட்டு 76பேரில் ஒருவர் விசாரணையின்பின் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டு மிகுதியாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுடன் இலங்கையில் தேடப்படும் புலி உறுப்பினர் ஒருவர் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
One thought on “76பேருடன் கனடா சென்றடைந்துள்ள ஓசியன்லேடி என்கிற கப்பல் புலிகளுடையது..”
Leave a Reply
You must be logged in to post a comment.
still we are with power