முன்னாள் விடுதலைப்புலி சந்தேக நபர் அக்கரைப்பற்றில் கைது
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் விடுதலைப்புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் இளம் யுவதியொருவர் விஷேட புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் திருக்கோவில் காயத்திரி கிராமத்தை சேர்ந்த தங்கவடிவேல் யுகிர்தா என்ற இளம் பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் ஏற்கனவே முன்பள்ளி ஆசிரியையாக சேவையாற்றிய இப்பெண் 2005ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும் கடந்த ஏப்ரலில் மாதம் அந்த அமைப்பிலிருந்து விலகி பெற்றோருடன் இணைந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை தனது தாயுடன் அம்பாறை வைத்தியசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து ஆட்டோவில் அக்கரைப்பற்று வரை பயணம் செய்து அங்கிருந்து அம்பாறைக்கு தனியார் பஸ்வண்டியில் பயணம் செய்துக் கொண்டிருந்தவேளை ஆலிம்நகர் எனுமிடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதுதொடர்பில் கிடைத்த தகவலையடுத்து வாகனமொன்றில் சென்ற பொலிஸார் குறித்த தனியார் பஸ்வண்டியை வழிமறித்து இவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating