பிள்ளையானின் பாதுகாப்பு வகனம் மோதியதில் மூவர் பலி
Read Time:1 Minute, 17 Second
கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் பாதுகாப்பு வகனமொன்று மோதியதில் மூன்றுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கிழக்குமாகாண முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு சென்ற வாகனத் தொடரணிகளின் வாகனமொன்றே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குருணாகல் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேகமாக சென்ற வாகனம் மரமொன்றில் மோதியதில் அருகிலிருந்த மூன்றுபேர் கொல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த விபத்தின் போது பிள்ளையான் குறித்த வாகனத் தொடரணியியில் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Average Rating