1900புலி உறுப்பினர்கள் இடம்பெயர் முகாம்களில் இருந்து கைது

Read Time:1 Minute, 18 Second

இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த சுமார் 1900விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். முகாம்களில் பொதுமக்களை போன்று இவர்கள் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் இவ்வாறான 300விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20000விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சில காவற்துறை அதிகாரிகள் வெளியிடும் தகவல்கள் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை துரிதகதியில் மீள்குடியேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கம் கடத்திச்சென்ற இலங்கையர்கள் இருவர் சென்னைவிமான நிலையத்தில் கைது
Next post ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக மாத்திரம் ஒருகோடி 90 லட்சம்ரூபா ஒதுக்கீடு -ஐ.தே.கட்சி