3வயதுசிறுமியை வன்முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இருவருக்கு விளக்கமறியல்
மூன்று வயதுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருநபர்களும் ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். தாயாருடன் இரவில் நித்திரையில் இருந்த இச்சிறுமியை ஜன்னல் வழியாக உட்புகுந்த இச்சந்தேக நபர்கள் தூக்கிச் சென்று கிணற்றடியில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டுள்ளதாக தெரியவருகிறது சந்தேக நபர்களான இரு இளைஞர்களுக்கும் போதைப்பொருள் மதுப்பாவனை செய்பவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமி வைத்திய பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இப்பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணி புரிகிறார் தாயாருடன் நித்திரை செய்துக் கொண்டிருந்த சிறுமியை வெளியே தூக்கிச்சென்று இந்த ஈனச்செயலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மொரகஹஹேன பொலிஸார் புலன்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating