மத்துகம பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வைத்தியசாலை ஊழியர் விளக்கமறியலில்..!
Read Time:1 Minute, 5 Second
காலி மாவட்டம் மத்துகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரான வைத்தியசாலை ஊழியர் ஒருவரை எதிர்வரும் 04ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 14வயது மாணவனை நாகொடை வைத்தியசாலையில் வைத்து ஊழியர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று குறித்த ஊழியரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 04ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating