அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம்
Read Time:52 Second
அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இருவர் யாழ்.குடாநாட்டுக்கு நேற்று முன்தினம் இரகசிய விஜயம் மேற்கொண்டு அங்குள்ள முன்னரங்க காவலரண்களின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்துள்ளதாகவும், கொழும்பிலிருந்து விசேட விமானம்மூலம் பலாலி படைத்தளத்திற்கு சென்ற இவர்களை படையினர் காங்கேசன்துறை, காரைநகர் படைத்தளங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் கூறுகின்றன. பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்த இவர்கள் படையதிகாரிகளையும் சந்தித்து பேசியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.