அவசரகால சட்டம் நீடிப்பு
Read Time:1 Minute, 1 Second
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அதனை வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ்கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா கேட்டதற்கமைய வாக்கெடுப்புக்கு பிரேரணை விடப்பட்டது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 102வாக்குகளும், எதிராக 18வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உறுமய என்பன ஆதரவாகவும், தமிழ்கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி என்பன எதிராகவும் வாக்களித்தன. இதனடிப்படையில் 84மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.