ஐஸ்லாந்து எரிமலை குமுறலால் விமான சேவைகள் பாதிப்பு, ஓமந்தைவரை புகையிரதசேவை நீடிப்பு..

Read Time:1 Minute, 14 Second

கொழும்பு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல மற்றும் விமான நிலையத்திற்கு வரவிருந்த மூன்று சர்வதேச விமானசேவைகள் நேற்றுக்காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் பரவிவரும் சாம்பல் புகை காரணமாகவே, இந்த விமானசேவைகள் ரத்துச்செய்யப்பட்டன. கடந்த வாரம்முதல் உலகளவில் பல விமானசேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வடபகுதிக்கான புகையிரதசேவை ஆரம்பிக்கப் பட்டிருக்கும் நிலையில் தாண்டிக்குளத்திலிருந்து, ஓமந்தைவரை புகையிரதசேவை நீடிக்கப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் மற்றும் ஓமந்தைக்குமிடையிலான தண்டவாளங்களை புனரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்புறுப்பிட்டி வாக்கு எண்ணும் பணி திருமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றம்.. புலிகளின் அச்சுறுத்தலாம்
Next post மீள் தேர்தலின் பொருட்டு விரிவான பாதுகாப்பு