படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்திய நால்வர் கைது
Read Time:1 Minute, 19 Second
படகுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய நான்குபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடி படகுகளை பயன்படுத்தி குறித்த சந்தேக நபர்கள் ஆட்களை கடத்தியுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வாழைச்சேனை ஊடாக சில காலமாக இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நபர்கள் அவுஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டுள்ளனர் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புரதான சந்தேக நபர் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது பெருந்தொகையான பணத்தை செலுத்தி படகுமூலம் மக்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating