போலியான பொலிஸ் வாகனம் களுத்துறையில் பிடிபட்டது

Read Time:1 Minute, 55 Second

களுத்துறையில் போலியான பொலிஸ் வாகனம் ஒன்றை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். களுத்துறைக்கு அருகாமையில் இந்த வாகனம் பயணித்தவேளையில் வேகத்தடைகளை தாண்டி மிகவும் வேகமாகவும் சீரற்ற முறையிலும் இந்த வாகம் செலுத்தப்படுவதை பார்த்த பொலிஸார் வாகனத்தை நிறுத்தச் சொல்லி கட்டளை பிறப்பித்தனர் இருப்பினும் அந்தசாரதி வாகனத்தை நிறுத்தவில்லை சற்றும் எதிர்பாராத விதத்தில் அவ்வழியாக எதேச்சையாக வந்த உண்மைப் பொலிஸ் ஜீப்பிற்கு பொலிஸார் கொடுத்த தகவலின் பின் அதில் வந்த பொலிஸார் இந்தப்போலி வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். இந்த டொயாட்டோ வாகனம் அசலில் அப்படியே பொலிஸாரின் வாகனத்தைப் போல நிறம் மாற்றப்பட்டுள்ளதுடன் சிவப்பு மற்றும் நீல வெளிச்சத்துடன் கூடிய லைட்டும் பொருத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின் உண்மையான வாகனம் போலவே இது காட்சியளித்தாலும் இலக்கத்தகடு எண்கள் வேறு ஒருபொலிஸ் வண்டிக்கு சொந்தமானவை என போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகனத்தை மடக்கிப் பிடித்தாலும் சாரதி தப்பி விட்டதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இவ்வாகனத்தில் பயணம் செய்த இருவரை தாம் கைது செய்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி 2வது பதவிப் பிரமாணம்வரை 38பேருடன் தற்காலிக அமைச்சரவை
Next post அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் -சர்வதேச மன்னிப்புசபை