இலங்கை மருத்துவருக்கு நியுஸிலாந்தில் கௌரவிப்பு
இலங்கையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியுசிலாந்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார் நாகலிங்கம் ராசலிங்கம் என்ற 73வயதான மருத்துவரே இவ்வாறு நியுஸிலாந்து அதிகாரிகளினால் கௌரவிக்கப்பட்டுள்ளார் அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் நோக்கில் நியுஸிலாந்து இந்த விருதினை வழங்கியுள்ளது. 2010ம் ஆண்டின் சிறந்த சேவையாளர்களுக்கான விருது வழங்கும் பட்டியலில் நாகலிங்கம் ராசலிங்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது புலம்பெயர் மக்கள் நியுஸிலாந்து சூழ்நிலைக்கு ஏற்றவகையில் வாழ்வதற்கு பல்வேறு வழிகளில் குறித்த மருத்துவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நியுஸிலாந்து வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடங்களில் ஒன்று எனவும் இந்த கௌரமளிப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாகவும் ராசலிங்கம் தெரிவித்துள்ளார். 1970ம் அண்டுமுதல் ராசலிங்கம் நியுஸிலாந்தில் மருத்துவசேவை ஆற்றி வருகின்றார். மருத்துவர் ராசலிங்கம் நியுஸிலாந்து அகதிகள் பேரவையின் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றி வருகின்றமையும் குறிப்பிடதக்கது
Average Rating