இலங்கை மருத்துவருக்கு நியுஸிலாந்தில் கௌரவிப்பு

Read Time:1 Minute, 49 Second

இலங்கையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியுசிலாந்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார் நாகலிங்கம் ராசலிங்கம் என்ற 73வயதான மருத்துவரே இவ்வாறு நியுஸிலாந்து அதிகாரிகளினால் கௌரவிக்கப்பட்டுள்ளார் அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் நோக்கில்  நியுஸிலாந்து இந்த விருதினை வழங்கியுள்ளது. 2010ம் ஆண்டின் சிறந்த சேவையாளர்களுக்கான விருது வழங்கும்  பட்டியலில் நாகலிங்கம் ராசலிங்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது புலம்பெயர் மக்கள் நியுஸிலாந்து சூழ்நிலைக்கு ஏற்றவகையில் வாழ்வதற்கு பல்வேறு வழிகளில் குறித்த மருத்துவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நியுஸிலாந்து வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடங்களில் ஒன்று எனவும் இந்த கௌரமளிப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாகவும் ராசலிங்கம் தெரிவித்துள்ளார். 1970ம் அண்டுமுதல் ராசலிங்கம் நியுஸிலாந்தில் மருத்துவசேவை ஆற்றி வருகின்றார். மருத்துவர் ராசலிங்கம் நியுஸிலாந்து அகதிகள் பேரவையின் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றி வருகின்றமையும் குறிப்பிடதக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகத் தீர்மானம்
Next post 75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு