75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு

Read Time:1 Minute, 17 Second

உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சுமார் 75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக கொண்டுவர முயற்சிக்கப்பட்ட வேளையில் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப் பயணிகளின் பயணப் பொதிகளில் மறைத்து வைத்து இப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுசெல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து குறித்த வகையிலான கையடக்கத் தொலைபேசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் சுமார் 2ஆயிரம் கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கையடக்கத் தொலைபேசிகளுக்கு எவரும் உரிமை கோராத காரணத்தினால் பொருடக்ள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை மருத்துவருக்கு நியுஸிலாந்தில் கௌரவிப்பு
Next post எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரதும் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்-ரணில்