யுத்தம் முடிந்தும் நாட்டில் சமாதானம் நிலவுவதாக கருதமுடியாது -நாடாளுமன்றில் சம்பந்தன்
Read Time:1 Minute, 0 Second
நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை நாம் வரவேற்கிறோம் எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டு விட்டது எனக்கருதமுடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 7வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் வசிக்கின்ற சகல மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்ககூடிய வகையில் இந்த நாடாளுமன்றம் அளப்பரிய பணியொன்றை ஆற்ற வேண்டியுள்ளது எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating