எதிர்வரும் மாதங்களில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை
Read Time:1 Minute, 25 Second
எதிர்வரும் மாதங்களில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம், நேற்று கூடியபின்னர், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களின் போது, நாடாளுமன்றம், மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் முறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி விருப்பு வாக்கு முறைமை ரத்துச்செய்யப்படும். அத்துடன் கிராமத்துக்கு ஒரு உறுப்பினர்தெரிவு இடம்பெறும் என்றும் புதிய அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையிலேயே எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தல் நடத்தப்படும் என்;றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating