ஏழாலைப் பகுதியில் பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டவருக்கு மூன்று மாதகால சிறை
Read Time:1 Minute, 25 Second
வீதியால் சென்ற பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட இளைஞருக்கு மூன்று மாதகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது ஏழாலைப் பகுதியில் வீதியில் தனிமையில் சென்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை மறித்து தகாதவார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் தகாத நடக்க முற்பட்டதாக தெரிவித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர் முறைப்பாடு செய்திருந்தார் இதனைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் முன் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிமன்றத்தில் இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மூன்றுமாத கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அந்நபர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating