சார்க்மாநாடு நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை -டலஸ் அழகப்பெரும
Read Time:1 Minute, 11 Second
சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாக தெரிவித்தமையை சிறந்த பதிலாக அரசாங்கம் கருதுகிறது இது பேச்சுவார்த்தைக்கான சிறந்த ஆரம்பமாக அமைந்துள்ளது. இதனடிப்படையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கைபடி ஜனாதிபதி பேச்சவார்த்தை நடத்தும் முனைப்புகளை மேற்கொள்ளக்கூடும் எனவும் அமைச்சர் டலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating