ஐ.தே.கட்சிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் சந்திப்பு
Read Time:1 Minute, 18 Second
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு நாளையும் தொடருமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசனும், கட்சியின் ஏனைய இரு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்கனர். இச்சந்திப்பின்போது, ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பிளவு ஏற்படக்கூடாது என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியதாகத் தெரிவித்த பிரபாகணேசன், நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் மனோகணேசனும் கலந்துகொள்ள வேண்டும் என ஐ,தே.கட்சி எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துளளார்.
Average Rating