உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்பட வாய்ப்பு

Read Time:1 Minute, 8 Second

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்படவிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஆளும் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 100,000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளும் எஸ்.பி. திஸநாயாக்கவிற்கு வழங்கப்படவிருக்கும் அமைச்சின்கீழ் கண்காணிக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும், நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை இடம்பெற்றதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடாநாட்டில் கடத்தல் கொலை, கொள்ளை அதிகரிப்பையிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு
Next post பொய் செய்திகள் ஊடாக குளிர்காய முனையும் தமிழ்வின் போன்ற விசம இணையத்தளங்கள்.. திருநாவற்குளம் சிறுமி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இணையத்தளமொன்றில் வந்த செய்திக்கு புளொட் மறுப்பு!