தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை..!
தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னணியின் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்இ ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படாத பட்சத்தில் பாராளுமன்றில் தனித்து செயற்படத் திட்டமிட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி மற்றம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியவற்றுக்கு தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பதவி விலகக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
Average Rating