வருடந்தோறும் மே 18ம் திகதி வெற்றிப்பேரணி -பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு
Read Time:1 Minute, 18 Second
இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கையால் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேமாதம் 18ம் திகதி காலி முகத்திடலில் வெற்றிபேரணி நடத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல இன மக்களும் கலந்துக் கொள்ளக்கூடிய வகையில் பேரணி ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதற்கு பிரபாகரனினால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காகவே படையினர் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்தனர் எனவும் அவர் தெரிவித்தார். யுத்த வீரர்கள் வாரம் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி நாளன்றே இந்த வெற்றிப்பேரணி வருடந்தோரும் காலிமுகத்திடலில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating