அனுஷ பெல்பிட்டவுக்கு பிரியாவிடை
Read Time:1 Minute, 9 Second
தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த 5வருடங்கள் பணியாற்றிய அனுஷ பெல்பிட்டவுக்கு திணைக்கள் உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்றுக்காலை பிரியாவிடை வழங்கியுள்ளனர். இது தொடர்பான வைபவம் அரச தகவல் திணைக்களத்தில் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ+.பி. கனேகல தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. முன்னாள் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இங்கு உரையாற்றுகையில், தமது பதவிக்காலத்தில் தம்முடன் இணைந்து சிறப்பாக சேவையாற்றிய அரச தகவல் திணைக்களத்தின் உயரதிகாரிகள் முதல் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தமது உத்தரவின்படி செயற்பட்ட அரச ஊடகத்துக்கும் தனியார் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
Average Rating