பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாற்றம்
Read Time:1 Minute, 23 Second
20 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ்சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வடமாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. பருத்தித்துறை கொழும்பு பஸ்சேவை அரச உத்தியோகத்தர்களுக்கும் படையினருக்குமே அதிகமாகப் பயன்படுகின்றது. இச்சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. பலாலி, தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரியவருகிறது.
Average Rating