ராஜீவ கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகனும் செம்மொழி மாநாடு போட்டியில்..
Read Time:1 Minute, 12 Second
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. தமிழ் அறிஞர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு தரப்பினர் தங்கள் தமிழ் படைப்புக்களை மாநாட்டில் சமர்ப்பிக்கின்றனர். இப்போட்டிகளில் சிறைக்கைதிகள் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டியில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து 20 கைதிகள் கலந்து கொள்கின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகனும் போட்டியில் கலந்து கொள்கிறார். வரும் 15 16ம் தேதி கைதிகளுக்கான போட்டிகள் நடக்கின்றன. அவற்றில் சிறந்த படைப்புக்கள் செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்
Average Rating