இதுவரை 100மோட்டார் சைக்கிள்களே அடையாளம் காணப்பட்டுள்ளது
வன்னி இடம்பெயர்வின் போது கைவிடப்பட்ட சுமார் 7000மோட்டார் சைக்கிள்களில் 100மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இந்த மோட்டார் சைக்கிள்களை உரிய பத்திரங்களுடன் அடையாளம் காட்டினால் அவை உரியர்களிடமே கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் ஒரு சிலரே இதுவரை அடையாளம் காட்டியுள்ளதால் ஏனையவர்களும் அடையாளம் காட்டுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 15ம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் உரியவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காட்ட தவறும் பட்சத்தில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது மேற்படி மோட்டார் சைக்கிள்கள் புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டமை ஆகும் இவற்றோடு பிற வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ள போதும் தற்போதைக்கு சைக்கிள்களை உரியவர்களிடம் படையினர் திருப்பி அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்
Average Rating