காணாமல் போன சிறுமி மாரவிலைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்
Read Time:1 Minute, 27 Second
கடந்த ஞாயிறன்று களனி ரஜமஹா விகாரையில் காணாமல் போன இரண்டரை வயதுச்சிறுமி மாரவிலை வீடொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலொன்றை அடுத்தே இச்சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த இச்சிறுமி தமது பெற்றோர் மற்றும் உறவினருடன் விஷேட வழிபாடொன்றில் ஈடுபடவே களனி விகாரைக்கு சென்றிருந்தார் அவ்வேளையில் இச்சிறுமி இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார். இச்சிறுமி மீட்கப்பட்ட வீட்டில் இருந்த 72வயது மூதாட்டியொருவர் பொலிஸாருக்கு வாக்குமூலமளிக்கையில் கொழும்பு புறக்கோட்டையில் அநாதரவான நிலையில் இருந்த இச்சிறுமி தான் வீட்டுக்கு கூட்டிவந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Average Rating