நெடியவன் தலைமையில் நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமே

Read Time:3 Minute, 17 Second

நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமேயாகும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடியவன் தலைமையில் இயங்கி வரும் க்ளோபல் தமிழ் போராம் என்ற அமைப்பு மிகவும் ஆபத்தானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை உருவாக்க முனைப்பு காட்டி வரும் ருத்ரகுமாரை விடவும் நெடியவன் ஆபத்தானவர் என அவர் தெரிவித்துள்ளார்.

ருத்ரகுமாரன் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய அரசியல் சாணக்கியத்தை கொண்டவர் எனவும், நெடியவன் தீவிர போராளி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நெடியவனின் ஜீ.ரீ.எப். அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த 90 வீதமானவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனவும், அவர்கள் ஒருபோதும் இலங்கைக்கு திரும்ப மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜீ.ரீ.எப்; அமைப்பைப் போன்றே பி.ரீ.எப் அமைப்பும் மிகவும் ஆபத்தானதென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு தெளிவான விளக்கம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எந்த நேரத்தில் ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எந்த நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பது குறித்து கோதபாய தெளிவான விளக்கத்துடன் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவை ஏற்பட்டால் கடுயைமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிரேஸ்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த கோதபாய தயங்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் மேற்குலக நாடுகள் கவனிக்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போன சிறுமி மாரவிலைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்
Next post லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது