அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் -அமைச்சர் விமல் வீரவன்ச
அரசியலமைப்பு சீர்திருத்தமானது மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணம் பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கட்சித்தலைவர்களுடனான நீண்டநேர சந்திப்பை அடுத்தெ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறும் அத்தடன் அரசியலமைப்பின் இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தின் போது தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் மூன்றவதாகவே செனட்குழு அமைக்கப்படும் இந்த சீர்திருத்தங்கள் அனைத்தம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Average Rating