சீரற்ற காலநிலையால் விமானசேவைகள் இடைநிறுத்தம்
Read Time:1 Minute, 17 Second
சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டு செல்லவிருந்த மற்றும் இலங்கையை வந்தடையவிருந்த விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது இத்தகவலை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்தடையவிருந்த விமானங்கள் இந்தியாவில் தரையிறக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் அயர்லர்தின் எரிமலை வெடிப்பினால் ஐரோப்பாவில் தொடர்ந்து பரவிவரும் சாம்பல் புகை மூட்டம் இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று அதிகாலை இங்கிருந்து ஐரோப்பா புறப்படவிருந்த விமானசேவையொன்று இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating