இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்..!

Read Time:1 Minute, 48 Second

இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை என்றும் அப்பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாக மீள்குடியேற்றத்துறையின் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முறிகண்டிப் பகுதியில் சாந்தபுரம் என்கிற பிரதேசத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதியில் அரச காணிகள் இருக்கும் நிலையில், இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தான் கருதுவதாகவும் இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் தான் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதாள உலகினர் வெளிநாடுகளில் புகலிடம் கோரல்..!
Next post போர்குற்றம் பற்றிய விசாரணைகளை நடத்துமாறு அமெரிக்க எம்.பி வலியுறுத்தல்..!