தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு
Read Time:56 Second
சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் தாய் ஒருவருக்கும் அவரின் இரு மகன்களுக்கும் கல்முனை மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.எஸ்.உம்மா (45), அவரின் மகன்களான எம். பைஸால் (26), ஐ.ரிஷான் (24) ஆகியோர் 2004 ஆம் ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் வைத்து மேற்படி சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கிலேயே மேற்படி மூவருக்கும் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Average Rating