நீதிமன்றத்தில் மின் துண்டிப்பு-வெள்ளைக் கொடி விவகார தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு..!
Read Time:1 Minute, 10 Second
கொழும்பு மேல் நீதிமன்றில் ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக வெள்ளைக் கொடி விவகார தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிய போது, முறைப்பாட்டு தரப்பின் பிரதான சாட்சியாளர் பெட்ரிகா ஜேன்சிடம் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நளின் லதுஹெட்டிகே குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார். இதன் போது, மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, இரு தரப்பு சட்டத்தரணிகளிடையே ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை மூவரடங்கிய நீதிபதிகள் குழு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.சாட்சியாளரிடம் அன்றைய தினமும் குறுக்கு விசாரணைகள் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating