சந்திரிக்கா படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய புலி உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது..!.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குரதுங்க படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி குறித்த நபருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது படுகொலையுடன் தொடர்பில்லை என தெரிவித்த, குறித்த நபர் இறுதியில் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவரை படுகொலை செய்யும் நோக்கில் குண்டு ஓன்றை தாம் வழங்கியதாக இளங்கேஸ்வரம் என்ற நபர் ஒப்புக் கொண்டுள்ளார். குறித்த நபருடன் பெண் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பச்சவேல் இளங்கேஸ்வரம் என்பவருக்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி தண்டனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 80 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2001ம் ஆண்டு முதல் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating