ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டு அக்குறணையில் விசேட நிகழ்வுகள்..!
அக்குறணையில் எதிர்வரும் 14ஆந் திகதி முதல் 22ஆந் திகதி வரை ஜனாதிபதி பதவி ஏற்பு தொடர்பாக விசேட வைபவங்கள் பல இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டு அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் இதனை முன்னிட்டு 15ஆம் திகதி ஆயிரம் மரக்கன்றுகளை 11 நிமிடத்தில் நாட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, பிரதேசத்தில் சிரமாதனப் பணிகள், பொது வேலைத் திட்டங்கள், மற்றும் பொது உடைமைகள் பலவற்றை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். நஸீர் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார். சுற்றாடல்தறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்ஸான் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
Average Rating