தேசிய அடையாள அட்டைத் தரவுகள் கணனி மயப்படுத்தப்படவுள்ளன..!
Read Time:57 Second
தேசிய அடையாள அட்டைத் தரவுகள் கணனி மயப்படுத்தப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார். நாட்டின் சகல தேசிய அடையாள அட்டை உரிமையாளர்களினதும் தகவல்களை கணனி மயப்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் சகல மாணவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் சகல பிரஜைகளுக்கும் கணனி மயப்படுத்தப்பட்ட நவீன தேசிய அடையாள அட்டைகள் விரைவில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating