ஒரே விமானத்தில் பயணித்த இரு துருவங்கள்
Read Time:1 Minute, 9 Second
மதுரைக்கு வந்த 7.40 ஜெட் நிறுவன விமானத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பயணம் செய்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்திருப்பதாகத் தெரிகிறது. மு.க. அழகிரி வழக்கமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இருவரும் ஒரே விமானத்தில் வந்திறங்கிய போதும், இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் இறங்கிய பிறகும் மனைவி பிரேமலதாவுடன் விஜயாகாந்த் முதலில் சென்றுவிட்டார். பின்னர் சற்று நேரம் கழித்து மு.க. அழகிரி சென்றுள்ளார்.
Average Rating