313 முன்னாள் LTTEயினர் உறவினர்களிடம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 313 பேர் தைப்பொங்கலை முன்னிட்டு உறவினர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கந்தக்காடு மற்றும் மருதமடு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற 313 முன்னாள் ஆண் போராளிகளே இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு ஏற்பாட்டில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி, வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரேரா, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், தென்மாகாண முதலமைச்சர் சான்லால் விஜயசிங்க, படை உயரதிகாரிகள், இராணுவத்தினர் பொலிஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Average Rating