சமவூரிமை இயக்கத்தினரால் யாழில் கையெழுத்துப் போராட்டம்
Read Time:1 Minute, 14 Second
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்தக் கோரியூம் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுவிக்கக் கோரியூம், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்தக் கோரியூம் சம உரிமை இயக்கத்தினரால் இன்று யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இன்றுகாலை 10 மணியளவில் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கையெழுத்துகளை பதிவூ செய்தனர். அதேவேளை இன்றுகாலை 8.45 மணியளவில் யாழ். பண்ணை தனியார் பஸ் நிலையத்துக்கு அருகில் சம உரிமை இயக்கத்தினரின் வாகனம் தரித்து நின்றபொழுது இரு மோட்டார் சைக்கிளில்களில் வந்த நான்கு இனம்தெரியாத நபர்கள் கல்வீசி வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating