கடனை அடைக்க முடியாமல் புலம்பும் கனேடியர்கள்! ஆய்வில் தகவல்
கனடாவில் ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் இருபதில் ஒருவர் தன்னால் கடனை அடைக்க இயலாது என்று புலம்புகிறார் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஹாரிஸ்/டெசிமா நிறுவனத்தினர் நடத்தியிருகிறார்கள்.
கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் பலர் தங்கள் முழு கடனை அடைப்பதில்லை. கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவரகள் கட்டும் வட்டித் தொகையைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. கடன் அட்டை கடன் பாக்கிக்கு வட்டி இருபது சதவீதம் போல் இருக்கிறது.
‘ஒருவன் திவாலவதற்கு கடன் அட்டைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் அது குறித்து கருத்துக் கணீப்பு நடத்தினோம்‘ என்கிறார் டாவ்க் ஹோய்ஸ். இவர் இந்த நிறுவன அதிகாரிகளில் ஒருவர்.
2012ல் சரசாரியாக ஒரு வீட்டினர் வைத்திருக்கும் கடன் அளவு உயர்ந்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 4.6சதவீதம் உயர்ந்திருக்கிறதாம்.
Average Rating