15 வயது சிறுமி குழந்தை பிரசவிப்பு: சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது

Read Time:1 Minute, 47 Second

ANI.Pregenent15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றே குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் கண்டி பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி சிறுமியின் காதலன் என்று கூறப்படும் மைத்துனர் உறவு முறையான 22 வயது இளைஞன் இச்சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

வயிற்றுவழிக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே இச்சிறுமி 7 மாத கர்ப்பிணி என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி அன்றைய தினமே குழந்தை பிரசவித்துள்ளார்.

விசேட குழந்தை பராமரிப்பு பகுதியில் குழந்தை சிகிச்சை பெற்று வருவதுடன் அவரது காதலன் எனக் கூறப்படும் மைத்துனரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பிரதான நிதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியளில் வைககுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து “பாய் பிரண்டை“ கொன்ற பெண்!
Next post செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது