ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டம்
Read Time:1 Minute, 12 Second
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் கூடி, அமைச்சரவை மாற்றம் குறித்து ஆராயவுள்ளனர். அரசாங்கத்தின் மிக முக்கியமான விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது.
மிக முக்கியமான சில அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய பிரதி அமைச்சர்களாக சிலர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. களனி தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவி குறித்தும் இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating