வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன -யாழ் ஆயர்
Read Time:1 Minute, 19 Second
யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெரும்பான்மை பலம் கொண்ட இந்த அரசாங்கத்தினால் வடபகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றன என யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகை சுட்டிக் காட்டியூள்ளார். வடபகுதி மக்களின் நிலை தொடர்பாக ஆராய்வதற்கு அமெரிக்காவின் துணைத் தூதரகத்தினை யாழ்ப்பாணத்தில் அமைக்க வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அப்பகுதி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இதன் ஒருகட்டமாக நேற்று பிற்பகல் யாழ்.மறைமாவட்ட ஆயரையூம் இவர்கள் சந்தித்தனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Average Rating