விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டுக்கு அருகாமையில் 51000 நிலக்கண்ணி வெடிகள்

Read Time:1 Minute, 29 Second

Ltte.PirabaHome
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்திலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் நாளொன்றுக்கு 90 கண்ணி வெடிகளை அகற்றி வருகின்றனர். பிரபாகரனின் வீட்டுக்கு அருகாமையில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 51, 000 அளவில் இருக்கும் என தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் முகாமையாளர் மேஜர் சுனில் ஆரியரட்ன தெரிவித்துள்ளார். ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய உதவிகளுடன் தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் பணியாற்றி வருகின்றது. மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக சகல நிலக்கண்ணி வெடிகளையும் அகற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Ltte.PirabaHome

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்- பயிற்சி ஆட்டத்தில் இ‌ந்‌திய அ‌ணி படுதோல்வி!
Next post ”அந்தரங்க இடத்தில் சிகரெட் சூடு… நண்பர்கள் முன் நிர்வாண நடனம்..”!!