சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் உதவி
Read Time:45 Second
வடக்குக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 90மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது. தண்ணீர் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய தேவைகள் இந்நிதி ஊடாக தீர்த்து வைக்கப்படுமென்றும் கூறப்படுகிறது.
Average Rating