பெண்ணொருவரை கடத்தியதாக ரங்கே பண்டார MPயின் வீடு சோதனை!
Read Time:57 Second
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் வீட்டில் பொலிஸார் மூன்று முறை சோதனை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நுகேகொடையிலுள்ள அவருடைய வீட்டையே மிரிஹான பொலிஸார் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பெண்ணொருவரை தடுத்து வைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த வீட்டை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் எவ்விதமான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
Average Rating