டில்சானின் பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை நோக்கிப் பொருத்தப்படவில்லை!– பொலிஸார்
பிரபல கிரிக்கட் வீரர் திலகரட்ன டில்சானின் வீட்டு பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை நோக்கிப் பொருத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். டில்சானின் வீட்டு பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை இலக்கு வைத்து பொருத்தப்பட்டிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த கமரா அந்த நீச்சல் தடாகத்தை இலக்கு வைத்து பொருத்தப்படவில்லை என பொலிஸார் நடாத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தேவை என்றால் வீட்டின் மதில் சுவரை உயர்த்திக் கொள்ளுமாறு முறைப்பாடு செய்த அயல் வீட்டு பெண்ணிற்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். மிரிஹான ரஜமஹா விஹாரை வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார். வீட்டை தமக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யுமாறு டில்சான் அச்சுறுத்தி வந்ததாகவும் குறித்த பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
Average Rating