சம்மாந்துறை வீரமுனை மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதம்
Read Time:57 Second
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீசிய மினி சு+றாவளி காரணமாக 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று வீசிய மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வீரமுனையின் 30 வீட்டுத்திட்டப் பகுதியிலும் இந்த மினி சு+றாவளி வீசியூள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த மினி சுறாவளி காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளடன் சில வர்த்தக நிலையங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
Average Rating