மரம் முறிந்து வீழ்ந்து குடும்பப் பெண் பலி!
Read Time:45 Second
பண்டாரவளை – பஸ்தியன்பொலவத்தை – அம்பதன்டேகம பகுதியில் வீசிய கடும் காற்றால் மரம் முறிந்து வீழ்ந்ததில் அதற்குள் நசுங்குண்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். 65 வயதுடைய ஆர்.வி.பிரேமாவதி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண்ணின் வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சடலம் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating